Shaping Future Doctors, Knowledge for Medical Excellence

இலை நத்தை

இலை நத்தை அல்லது இலைச் செம்மறி (Costasiella kuroshimae) ஒளிச்சேர்க்கை செய்யக்கூடிய வயிற்றுக்காலி வகுப்பைச் சேர்ந்த விலங்கு. எமது கிரகத்தில் உள்ள விசித்திரமான விலங்குகளில் ஒன்றாகும். இவை ஒரு பண்ணை விலங்கு போல தோற்றமளிகின்றன, ஒரு செடியைப் போலச் செயல்படுகின்றன, கடலில் வாழ்கின்றன!இந்த சிறிய கடல் நத்தைகள் மரபுரீதியாக விலங்குகள், ஆனால் தாவரங்களைப் போலவே, அவை சூரியனில் இருந்து ஆற்றலையும் பெறுகின்றன. இலைச் செம்மறிகள் ஆல்காவை சாப்பிடும்போது, ​​அவை குளோரோபிளாஸ்ட்களை உறிஞ்சி, க்ளெப்டோபிளாஸ்டி (kleptoplasty) எனப்படும் ஒரு […]

பல் ஈறழற்சி (Gingivitis)

பல் ஈறுகளில் கிருமித்தாக்கத்தால் ஏற்படும் அழற்சி. முரசானது செந்நிறமாக, வீங்கிக் காணப்படும். பற்களைத் தீட்டும் போது இரத்தம் கசியும். பெரும்பாலும் இத்தகைய நோயுடையோரிற்கு வலி எடுப்பதில்லை, எனவே அதனைப் பற்றி அக்கறை கொள்ளாது உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்வதில்லை. இது உருவாகுவதற்குரிய முன்னணிக் காரணியாக பாக்டீரியாக்கள் திகழ்கிறது. பொதுவாகவே பற்களில் முரசுகளில் ஒரு நிறமற்ற படலமாக பாக்டீரியாக்கள் படிகின்றன. பற்சூத்தை (dental caries) மற்றும் பற்சுற்றி (periodontal) நோய்களின் ஆரம்ப நிலையில் ஏற்படும் இத்தகைய படலம் பிளாக் […]

கறிவேப்பிலை மருத்துவக் குறிப்புகள்

இவை செவி வழிவந்த மருத்துவக் குறிப்புகளாகும். இவற்றின் உண்மைத் தன்மை பரிசீலனைக்குரியது. வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலை மென்று சாப்பிட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 இலை மென்று சாப்பிடலாம் அல்லது கறிவேப்பிலையை நிழலில் நன்றாக உலர்த்தி காயவைத்து பொடிப் பொடியாக ஆக்கி கசாயம் செய்து காலை மற்றும் மாலை அருந்தி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம். 3 மாதம் சாப்பிட நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். […]

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

புற்றுநோயைத் தடுக்கவல்லது எனக் கருதப்படுகின்றது. நீரிழிவு நோயை கறிவேப்பிலை கட்டுப்படுத்துகின்றது. இதய நோயைக் (தமனிக்கூழ்மைத் தடிப்பு) குணமாக்கின்றது. வாய்புண்ணைக் குணப்படுத்தும்; பல் ஈறு வலுவாகும். வயிற்று உபாதைகள்: சமிபாடின்மை, மலச்சிக்கல் போன்றவற்றைப் போக்கும். சுக்கிலம் விருத்தியடைய உதவும்.

ஆய்வு நிகழ்வுகள்

ஈரல் புற்றுநோய் உயிரணுக்களின் (HepG2) பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றது என ஆய்வொன்று தெரியப்படுத்துகின்றது.(1) இதுமட்டுமல்லாது அக்குறிப்பிட்ட உயிரணுக்களில் ஏற்படக்கூடிய உயிரணு-தன்மடிவையும் (apoptosis) தூண்டுகின்றது. இதனால் ஹெப்ஜீ2 வகை புற்றுநோய்க் கலங்கள் அழிகின்றன. இது புற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றது. இதன் இந்தச் செயலுக்கு கறிவேப்பிலையில் உள்ள கிரினிம்பைன் (girinimbine) எனும் காரப்போலி (ஆல்க்கலாய்டு) காரணமாகும். ஆய்வாளர்கள் இதனை கறிவேப்பிலையில் இருந்து பிரித்தெடுத்து ஆய்வுகூடத்தில் வளர்ச்சியுறும் புற்றுநோய் உயிரணுக்களில் இதனைப் பரிசீலித்தனர். மனிதரில் இன்னமும் பரிசீலனை நடைபெறவில்லை. ஆய்வுகூடத்தில் இசுத்ரேப்டோசோடோசின் (streptozotocin) எனும் வேதியற்பொருள் […]

வாழைப்பழம்

முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழம் உடலின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. மூலத்தால் கசியும் குருதிப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது. ஒரு வாழைப்பழத்தில் (100 – 150 கிராம்) 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று […]

வாழை இலை

வாழை இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தன. தோலில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் தோலுக்கு மெருகேற்றி அழகைக் கூட்டுகின்றது. இது இலையாக அல்லது அதிலி இருந்து எடுக்கும் சாறாகப் பயன்படுகின்றது. தோலில் ஏற்படும் சிறிய புண்கள் மற்றும்  வேறு  தோல் நோய்களான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு, தீப்புண் , வேனிற் கட்டி (sunburn) போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. புதிய இலைகளில் இருந்து கிடைக்கும் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால் குணமடையும். குளிர்ந்த நீரில் […]

வாழைத்தண்டு

உடல் எடை குறைய: ஒருநாள்விட்டு ஒருநாள் சமைத்துச் சாப்பிட்டால் உடல் கொழுப்பு குறைந்து இளைக்கலாம். வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், குருதியில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. கொசுக்கடி: கொசுக்கடித்து தடிப்பு ஏற்பட்டால் வாழைத்தண்டை இரண்டாக வெட்டி, வெட்டிய பகுதியைக் கொசுக்கடித்த இடங்களில் சில நிமிடங்கள் தேய்த்தால் குணமாகும். முகப்பரு: முகப்பருவிற்கு வாழைத்தண்டை பாதியாகப் பிளந்து முகப்பருவுள்ள இடங்களில் தினமும் 2 நிமிடங்கள் […]

வாழை வகைகளும் அவற்றின் பழங்களின் பயன்களும்

செவ்வாழை மலைவாழை: சமிபாட்டுகுறைபாடு (அஜீரணம்), மலச்சிக்கல், சோகையை நீக்கும் மொந்தன்: காமாலை பூவன் : மலச்சிக்கல், மூலநோய்  பேயன்: வயிற்றுப் புண் கப்பல் வாழை (ரசுதாளி, ரஸ்தாலி) கற்பூரவல்லி பச்சைவாழை: வெப்பத்தைக் குறைக்கும் ஏலரிசி வாழை: கதலி வாழை நாடன் நேந்திரம்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

பொதுவாக  செரிமானம் தொடர்பான வயிற்று வலிகள், பயணப்பிணியால் ஏற்படும் குமட்டல், பசியின்மையைப் போக்கல், இருமல் போன்ற சுவாச நோய்கள், மூட்டுவலி போன்றனவற்றில் இருந்து நிவாரணம் பெற இஞ்சி உதவுகின்றது. இவை தொன்றுதொட்டு உபயோகத்தில் இருக்கும் இஞ்சியின் மருத்துவப் பண்புகள் ஆகும். நாட்டு மருத்துவத்தில் இஞ்சியைப் பல்வேறு நோய்களைத் தீர்க்கவல்ல மூலிகையாகக் கருதுகின்றனர். இவை செவி வழிவந்த தகவல் எனினும் பல உபாதைகளை இஞ்சி தீர்க்கின்றது என்பது பலர் கண்டறிந்த உண்மை. இங்கு கீழே பட்டியலிப்பட்டவை இஞ்சியின் சில […]

இஞ்சியில் உள்ள வேதிப்பொருட்கள், ஆய்வுகள்

இஞ்சியின் நறுமணத்திற்கு அதில் காணப்படும் சிஞ்செரோன் (zingerone),  சோகவோல் (shogaols), மற்றும் சிஞ்செரோல் (gingerols) ஆகியன காரணமாகும். ஆய்வுகூட விலங்குகளில் சிஞ்செரோல் உணவுக்குழலியத் தொகுதியின் சுயாதீன அசைவைக் கூட்டுகிறது. மேலும் வலியைப் போக்கும், காய்ச்சலைக் குறைக்கும் மருந்தாகவும் நுண்கிருமி கொல்லியாகவும் உள்ளதென்பதை ஆய்வுகூட விலங்குகளில் உறுதி செய்துள்ளனர். (1) அமெரிக்க புற்றுநோய் மையத்தின் கூற்றின் படி இஞ்சி ஒரு புற்றுநோய் தீர்க்கவல்ல மருந்தாக கருதப்படுகின்றது, புற்றுநோய்க் கலங்கள் பெருக விடாமல் தடுக்கும் இயல்பு உடையது என்றும் ஆனால் இதனை […]

இஞ்சியில் உள்ள சத்துப் பொருட்கள்

சத்துப் பொருட்கள்   100 கிராம் இஞ்சிப் பொடியில் 100 கிராம் பச்சை இஞ்சியில்   மாப்பொருள் 71.62 g   17.77 g   புரதம் 8.98 g   1.82 g   கொழுப்பு 4.24 g   0.75 g   உயிர்ச்சத்துகள்         தயமின் (உச பி1) 0.046 mg 4% 0.025 mg 2%   இரைபோஃப்ளேவின் 0.17 mg 14% 0.034 mg 3% […]

இஞ்சியின் பொதுவான குணங்கள்

இஞ்சி எரிப்புக் குணத்தை உடையது. உமிழ்நீர் சுரத்தலைத் தூண்டவல்லது. இதனால் உணவுப்பொருட்கள் எளிதில் விழுங்க உதவி புரிகின்றது. இஞ்சி இலைகளும், தண்டுகளும் வாசனை தரவல்லது. இஞ்சி கடுமையான கார ருசி உடையது. இலைப்பகுதி உலர்ந்ததும் இஞ்சியின் வேர்த்தண்டுகள் தோண்டி எடுக்கப்படும். உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை “சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்ற […]

இஞ்சி

பண்டைய காலம் தொட்டு ஒரு மூலிகையாகவும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமணப் பொருளாகவும் தமிழர்களிடையே இஞ்சி திகழ்கின்றது. இஞ்சித்துவையல், இஞ்சிக்குழம்பு, இஞ்சிப்பச்சடி, இஞ்சிக்கசாயம் போன்றன இஞ்சியைப் பயன்படுத்தி ஆக்கப்படும் உணவு வகைகள். பெயர்த் தோற்றம் இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல், சுவறுதல் அல்லது உறிஞ்சுதல் எனப்பொருள். இஞ்சி என்றால் கோட்டை மதில் என்றும் பெயர். இவற்றில் இருந்து பெயர் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இலத்தின் பெயரான Zingiber தமிழ் மற்றும் மலையாளச் சொற்களான இஞ்சி […]

மூப்புப்பார்வை

பிரஸ்பையோப்பியா (presbyopia) அல்லது மூப்புப்பார்வை என்பது விழியின் அண்மைப் பார்வைக்கான குவிமையத்தன்மை ஆற்றலானது வயதுடன் குறைபட்டுச் செல்லுகின்ற ஒரு உடல் நலக்குறைபாடாகும் இதன் போது விழி ஏற்பமைவுத் தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்தக் குறைபாட்டிற்கான சரியான விளக்கம் திட்டவட்டமாகத் தெரியாவிடினும் ஆய்வுகளில் இருந்து கண்ணின் வில்லை மீட்சித்தன்மையை இழப்பது, வில்லையின் வடிவத்தை மாற்றி அமைக்கும் பிசிர்த்தசை வலுவிழப்பது, வில்லை பெரிதாகிக் கடினமாவது போன்றவை காரணமாகலாம் என அறியப்பட்டுள்ளது. வெள்ளை முடியும் சுருக்கங்களும் முதுமை அடைவதைக் காட்டுவதைப் போலவே மூப்புப்பார்வையும் (பிரஸ்பையோப்பியாவும்) முதுமை […]

கருவிழிப்படல முதிர் வளையம்

முதிர் வளையம் அல்லது கருவிழிப்படல முதிர் வளையம் (arcus senilis corneae) என்பது வெண்மையான அல்லது சாம்பல்நிறமான ஒளிபுகாத வளையமொன்று கருவிழிப்படலத்தைச் (cornea) சுற்றிக் காணப்படுவது ஆகும். இது பிறப்பின்போது காணப்பட்டுப் பின்னர் மறைந்துவிடும், எனினும் 60 – 70 வயதுக்கு மேற்பட்டவர்களில் பொதுவாகக் காணப்படலாம், குருதியில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளோரில் அல்லது நீரிழிவு நோயுள்ளவர்களில் ஆரம்பகாலங்களிலேயே (40 வயதளவில்) தோன்றலாம், எனினும் இது எவ்வித நோய்கள் இல்லாமலும் தோன்றலாம், அத்தகைய சூழ்நிலையில் குறிப்பிட்ட நபருக்கும் குடும்பத்தில் உள்ளோருக்கும் பரம்பரை உயர் குருதிக் […]

அசைவுப் பார்வையின்மை

அசைவுப் பார்வையின்மை அல்லது அசைவுக் குருட்டுத்தன்மை (அகைனேடோப்சியா; Akinetopsia; motion blindness) என்பது மிகவும் அரிதான நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும், இதில் ஒரு பொருளின் அசைவை நோயாளியால் நோக்க இயலாது. ஒவ்வொரு கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் தோன்றுபவற்றைப் படிமங்களை நோக்குவது போன்று அசைவுப் பார்வையின்மைக் குறைபாடுஉடையோர் நோக்குவர். எனவே ஓரு பொருளின் தொடர்ச்சியான அசைவை ஒருபோதும் இவர்களால் பார்க்க முடிவதில்லை.இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளி தேநீரைக் குவளையில் ஊற்றும்போது தேநீர் உறைந்துபோனதைப் போன்ற ஒரு தோற்றம் உண்டாகும், […]

உயிர்ச்சத்துப் பெயரிடல் முறை மாற்றங்கள்

உயிர்ச்சத்துக்கள், இலத்தீன் அகர எழுத்துக்களைக் கொண்டு A, B, C, D, E, K எனப் பெயரிடப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக உள்ள அகர எழுத்துக்கள், பின்னர் விடுபட்டு E இலிருந்துKஇற்கு தாவி நிற்பதனை இங்கு அவதானிக்கலாம், காரணம் என்னவென்றால், இவற்றுள்F இலிருந்து J வரையிலான எழுத்துக்களால் குறிக்கப்பட்ட உயிர்ச்சத்துக்கள், தற்பொழுது உயிர்ச்சத்துக்கள் இல்லையெனவும், உயிர்ச்சத்துBயின் உபபிரிவுகளிலும் அடங்குகின்றன. முன்னைய பெயர் வேதியியற் பெயர் பெயர் மாற்றப்பட்டதற்கான காரணம் உயிர்ச்சத்து B4 அடினின் டி.என்.ஏயின் வளர்சிதை விளைபொருள்; உடலில் […]

உயிர்ச்சத்துக் குறைபாட்டு நோய்கள்

ஒரு சிறிய அளவே (பொதுவாக நாள் ஒன்றுக்கு ஒரு மில்லி கிராமுக்கும் குறைவாக) தேவைப்படும் உயிர்ச்சத்தின் பற்றாக்குறையால் ஏற்படும் விளைவுகள் உயிரையே போக்கும் அளவுக்கு ஆபத்தானவை, எனவே மனிதருக்கு ஒழுங்கான உயிர்ச்சத்துப் பயன்பாடு தேவையாகிறது, கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் (ஏ, டி) உடலில் சேமிக்கப்பட்டாலும் நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பி12 உடலில் சேமிக்கப்படுகிறது.(11) குறைபாட்டை உண்டாக்கும் பிற காரணிகள் குடலில் அகத்துறிஞ்சாமை ஏற்படும் நிலையில் உயிர்ச்சத்துக்களும் உடலில் உள்ளெடுக்கப்படுவதில்லை. நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள் கூட உயிர்ச்சத்துப் பற்றாக்குறையை […]

உயிர்ச்சத்துக்களின் முக்கியத்துவம்

ஒரு பலகல உயிரினத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக உயிர்ச்சத்து விளங்குகின்றது. உயிரினத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் இருந்து இறுதிக்காலம் வரை தேவையானதாக விளங்கும் உயிர்ச்சத்து, முதன் முதலில் கருவாக இருக்கையில் தாயிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது, இந்த நிகழ்வில் மாற்றம் ஏற்படும் போது, அதாவது போதிய அளவு உயிர்ச்சத்துகளோ அல்லது கனிமங்களோ கிடைக்காதநிலையில் பிறக்கும் குழந்தை குறைபாட்டுடன் உலகில் தோன்றுகிறது. பெரும்பங்கு உயிர்ச்சத்துக்கள் உணவின் மூலம் பெறப்பட்டாலும், மனித குடலில் வசிக்கும் சாதாரண பாக்டீரியாக்கள் உயிர்ச்சத்து ‘கே’ மற்றும் பையோட்டின் போன்றவற்றை […]